நடிகை ரைசா வில்சன் தான் கதறி அழும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதை பார்த்த அவரது ரசிகர்காள் பதறிப்போயுள்ளனர்.

ஹாட் புகைப்படங்கள்

தொடக்கத்தில் மாடலாக இருந்து வந்த ரைசா வில்சன், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார். பின்னர் வெள்ளித் திரையில் நுழைந்தார். இவரது நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது. அதன்பிறகு சினிமாவில் படிப்படியாக முன்னேறி வந்த நடிகை ரைசா வில்சன், மாடர்ன் போட்டோ ஷூட்களாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார். தனது கவர்ச்சி புகைப்படம் மூலம் இலசுகளை தன் பக்கம் வைத்திருந்த ரைசாவிற்கு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சமீபத்தில் கூட நீச்சல் உடையில் கவர்ச்சியாக எடுத்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

தேம்பி அழுத ரைசா

எப்பொழுதும் ஜாலியாக இருக்கக்கூடிய நடிகை ரைசா, சமீபத்தில் தேம்பித் தேம்பி அழுது, சிவந்த கண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அதனுடன் “யாரும் தனியாக இல்லை நாம் அனைவரும் படிப்படியாக அதை கண்டுபிடித்து வருகிறோம்” என சோகமாக பதிவிட்டிருந்தார். இதை பார்த்து ரசிகர்கள் செம ஷாக்கீல் உள்ளனர். என்ன ஆச்சு ரைசா? என்று கேள்வி கேட்டு வருகின்றனர். ஏன் இப்படி சோகமாக இருக்கிறீர்கள் எந்த பிரச்சினையாக இருந்தாலும் சீக்கிரம் சரியாகிவிடும் கவலைப்படாதீர்கள் என்று ஆறுதலையும் கூறி வருகின்றனர். நடிகை ரைசா தற்போது லவ், காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here