இர்ஃபானுக்கு தடல் புடலாக விருந்து கொடுத்துள்ளார் ஆளுநர் ஆர்.என். ரவி.

பிரம்மாண்ட திருமணம்

யூடியூப் மூலம் பிரபலமான இர்ஃபானுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. ஃபுட் ரிவ்யூ மூலம் மிகவும் பிரபலமானவர் யூடியூப்பர் இர்ஃபான். இவருக்கும், இவர் ரிவ்யூவுக்கும் பல ரசிகர்கள் உள்ளனர். தனது யூடியூப் சேனலிலும், இன்ஸ்டாகிலும் ஃபுட் ரிவ்யூவை அப்லோட் செய்து வருவார் சுமார் 35 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் இவரை பின் தொடர்கின்றனர். சமீபத்தில் இவருக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் பல முன்னணி நட்சத்திரங்களுக்கும், பல அரசியல் தலைவர்களுக்கும் நேரில் பத்திரிக்கை கொடுத்து திருமணத்திற்கு அழைத்து இருந்தார் இர்ஃபான்.

விருந்து கொடுத்த ஆளுநர்

இந்நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவியையும் திருமணத்திற்கு அழைத்திருந்தார் இர்ஃபான். ஆனால் பிசியாக இருந்த காரணதினால் ஆளுநரால் இர்ஃபானின் திருமணத்தில் பங்கேற்க முடியாமல் போனது. ஆளுநர் ரவியும் இஃர்பான் ரசிகர் என்பதால், அவர் இர்ஃபானை திருமணம் முடிந்த கையோடு வீட்டுக்கு அழைத்து தடல் புடலாக விருந்து கொடுத்துள்ளார். ஆளுநரின் அழைப்பை ஏற்று இர்ஃபான் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வந்து ஆளுநர் ரவியை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி விட்டு சென்றுள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆளுநரின் இந்த செயலால் உற்சாகத்தில் உள்ளதாக யூடியூபர் இர்ஃபான் கூறியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here