நடிகை பூர்ணா முதல் முறையாக தனது குழந்தையை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

பிடித்த நடிகை

இயக்குநர் திருமுருகன் இயக்கத்தில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தின் மூலம் தமிழ் திரையுலகருக்கு அறிமுகமானவர் நடிகை பூர்ணா. இந்த படத்தில் பரத் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு கொடைக்கானல், கந்தகோட்டை, துரோகி போன்ற பல படங்களில் நடித்துள்ளார் நடிகை பூர்ணா. இவர் நடித்த தமிழ் படங்கள் எதுவும் கைகொடுக்காத நிலையில், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து தன்னை நிலைநிறுத்திக்கொண்டார் நடிகை பூர்ணா, 2021ஆம் ஆண்டு இயக்குநர் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான தலைவி படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் நானி – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பெரும் பொருட்செலவில் பான் இந்தியா படமாக வெளியான தசரா படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முகத்தை காட்டிய பூர்ணா

துபாய் தொழிலதிபர் ஷனித் அசிப் அலியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை பூர்ணா சமீபத்தில் கர்ப்பமாக இருக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் ஏப்ரல் 5ஆம் தேதி ஆண் குழந்தைக்கு தாயான நடிகை பூர்ணா, தனது குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடத்தியுள்ளார். அது மட்டும் இல்லாமல் குழந்தையின் முகத்தை முதல்முறை வெளியே காட்டியுள்ளார். குழந்தைக்கு “ஹம்தன் ஆசிப் அலி” என்று பெயர் சூட்டியுள்ளதாக பூர்ணா அறிவித்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அம்மாவை போலவே பிள்ளை என்று கூறி வாழ்த்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here