நடிகை ஹன்சிகா தன்னைப் பற்றி வெளியான வதந்திக்கு விளக்கம் கொடுத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

கோலாகலமான திருமணம்

தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. குட்டி குஷ்பு என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர். சமீபகாலமாக உடல் எடையை கணிசமாக குறைத்து மெல்லிய தோற்றத்திற்கு மாறி ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்தார். பல முன்னணி நடிகர்களுடன் நடித்து கொண்டு இருக்கும் சமயத்தில் திருமணமும் செய்துகொண்டார். கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி சோகைல் கதுரியா என்ற தொழிலதிபரை ஹன்சிகா திருமணம் செய்துகொண்டார்.

வதந்திக்கு விளக்கம்

2019 ஆம் ஆண்டு முதல் சில படங்களில் மட்டுமே நடித்து வந்த நடிகை ஹன்சிகா, கடைசியாக “மகா” என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த படம் படுதோல்வி அடைந்தது. தற்போது இவரது நடிப்பில் தெலுங்கில் சில படங்களும், தமிழில் ரவுடி பேபி, கார்டியன், காந்தாரி உள்ளிட்ட படங்களும் உருவாகி வருகிறது. திருமணத்திற்கு பிறகும் பிஸியாக இருந்து வரும் நடிகை ஹன்சிகா மோத்வானி, தன்னைப் பற்றி வெளியான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதாவது, அதிக உடல் வளர்ச்சிக்காக ஹன்சிகா மோத்வானி ஊசி போட்டுக் கொண்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதற்கு பதில் அளித்துள்ள ஹன்சிகா, “பிரபலமாக இருப்பவர்களுக்கு இதுவும் ஒரு பகுதி தான். இந்த வதந்தியில் எந்த உண்மையையும் இல்லை. இதுவரை நான் ஊசி போட்டுக் கொண்டதும் இல்லை, டேட்டூ கூட போட்டுக் கொண்டதும் இல்லை. அதற்கு காரணம் எனக்கு ஊசி என்றால் மிகவும் பயம் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here