நடிகர் ரஜினிகாந்தின் 170வது படத்தில் நடிகர் விக்ரம் வில்லனாக நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிஸியான சூப்பர் ஸ்டார்

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் “ஜெயிலர்” படத்தில் நடித்து முடித்துள்ளார். ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் அனிருத். ஜெயிலர் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு மும்பையில் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து தனது 170வது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் ரஜினிகாந்த்.

வில்லனான விக்ரம்

ரஜினியின் 170வது படத்தை ஜெய் பீம் படத்தை இயக்கிய இயக்குநர் ஞானவேல் இயக்க உள்ளார். வரும் ஆகஸ்ட் முதல் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளது. இந்நிலையில் படத்தில் நடிக்க போகும் நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகின்றது. இதில் முக்கியமான தகவல் என்னவென்றால் ரஜினிக்கு வில்லனாக நடிக்க நடிகர் சீயான் விக்ரம் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விக்ரமின் கதாபாத்திரம் மிகுந்த அளவில் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து ரஜினிகாந்துக்கு வில்லனாக விக்ரம் நடிக்கப்போகும் தகவல் பெரும் எதிர்பார்ப்பை கூட்டி உள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும் விக்கிரமுக்கு மட்டும் ரூ.50 கோடி வரை சம்பளம் பேசியுள்ளதாக கூறப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here