சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு கொல்கத்தா அணி வீரர்கள் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினர்.

கடும் போட்டி

தற்போது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் சுற்று போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி குஜராத் டைட்டன்ஸ் அணி மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. மீதமுள்ள மூன்று இடங்களை பிடிக்க சென்னை, பெங்களூர், கொல்கத்தா, ராஜஸ்தான், பஞ்சாப், மும்பை, லக்னோ ஆகிய அணிகள் தீவிரமாக போட்டி போட்டு வருகின்றன.

சூப்பர் ஸ்டாருடன் சந்திப்பு

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை சேப்பாக்கத்தில் கடைசி லீக் போட்டி எம்.எஸ்.தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது. அந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றியடைந்த சந்தோஷத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளனர். வருண் சக்கரவர்த்தி, வெங்கடேஷ் ஐயர் இருவரும் ரஜினிகாந்தை சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாக்களில் வைரலாக பரவி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here