நடிகை சாய் பல்லவி சிறு வயதில் தனக்கு ஏற்பட்ட காதல் அனுபவத்தை தற்போது பகிர்ந்துள்ளார்.

நேச்சுரல் பியூட்டி

1992 ஆம் ஆண்டு மே 9ஆம் தேதி பிறந்த சாய் பல்லவி, இன்று தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் சினிமா ரசிகர்களை அவர் திரும்பிப் பார்க்க வைத்தார். தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வரும் சாய் பல்லவி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் இவர் நடித்த சில படங்கள் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் இவரது ரவுடி பேபி பாடல் இன்றும் யூடியூப் ரெண்டாகவே இருந்து வருகிறது. அதிக மேக்கப் இல்லாமல் நேச்சுரல் பியூட்டி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை சாய் பல்லவி, ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்திலேயே நடித்து வருகிறார். தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து SK21 திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

செம அடி

நடிகை சாய் பல்லவி சிறுவயதில் தனக்கு ஏற்பட்ட காதல் அனுபவத்தை தற்போது பகிர்ந்துள்ளார். இதுகுறித்து சாய்பல்லவி அளித்துள்ள பேட்டியில்: “நான் 7 ஆம் வகுப்பு படிக்கும்போது எனது வகுப்பு மாணவன் ஒருவனை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவன் மீது இனம் புரியாத ஈர்ப்பு ஏற்பட்டது. அந்த விஷயத்தை அவனுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதற்காக ஒரு காதல் கடிதம் எழுதினேன். ஆனால் அந்த கடிதத்தை அவனுக்கு எப்படி கொடுப்பது என்று தெரியாமல் புத்தகத்தில் வைத்துக்கொண்டேன். எதிர்பாராமல் என் அம்மா கண்ணில் அந்த கடிதம் பட்டு அளவு கடந்த கோபம் வந்துவிட்டது. என்னை செமையாக அடித்து விட்டார்.

ஹீரோ தான்

அம்மா அடித்தது அதுதான் முதல் முறையும், கடைசி முறையும். இப்போது வரை மீண்டும் என் அம்மாவிற்கு கோபத்தை வரவழைக்கும் எந்த வேலையையும் நான் செய்யவில்லை. நம்மை எவ்வளவோ செல்லமாக பார்த்துக்கொண்டு நிலாவை காட்டி சோறு ஊட்டிய தாயாக இருந்தாலும் அவரது கையில் அடிவாங்காத குழந்தைகள் இருக்க மாட்டார்கள். குழந்தைகளை நல்ல வழியில் நடத்தும் ஒவ்வொரு தாயும் தன் குழந்தைகளுக்கு ஹீரோதான்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here