சோசியல் மீடியாக்களில் இருந்து தற்காலிகமாக விலகப் போவதாக நடிகையும், நடிகர் பகத் பாஸிலின் மனைவியுமான நஸ்ரியா தெரிவித்துள்ளார்.

கியூட் நடிகை

குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமா மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை நஸ்ரியா, நேரம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். மலையாளம் மற்றும் தமிழில் பையிலிங்குவல் படமாக உருவான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் அதன்பிறகு வெளியான “ராஜா ராணி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த, இப்படத்தை அட்லீ இயக்கியிருந்தார். இவரது துருதுரு நடிப்பும், கியூட்டான முகபாவமனையும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. தமிழில் பல ரசிகர்களைக் கொண்டிருந்தாலும் அதன்பிறகு இவர் நடிப்பில் வெளியான எந்த தமிழ் படங்களும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பிரபலமாகவில்லை. மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்து வந்த நஸ்ரியா, சோசியல் மீடியாக்களிலும் அடிக்கடி அப்டேட்டுகளை வெளியிட்டு வருவார்.

விலகிய நஸ்ரியா

2014 ஆம் ஆண்டு நடிகர் பஹத் பாஸிலை திருமணம் செய்துகொண்ட நஸ்ரியா, மூன்று வருட இடைவேளைக்கு பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது சோசியல் மீடியாக்களில் இருந்து தற்காலிகமாக விலகப்போவதாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்; “தற்காலிகமாக சோசியல் மீடியாக்களில் இருந்து விலகி உள்ளேன். உங்கள் அன்பையும் மெசேஜ்களையும் நான் மிஸ் செய்கிறேன். கண்டிப்பாக திரும்பி வருவேன். ப்ராமிஸ்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் நஸ்ரியா கர்ப்பமாக இருப்பதாகவும், அதனாலையே சோசியல் மீடியாக்களில் இருந்து சில நாட்கள் விலகி இருக்க பிளான் செய்து இருப்பதாகவும் சில செய்திகள் வெளியாகி உள்ளது. ஆனால் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here