நடிகர் அஜித் குமார், சிம்ரன் நடிப்பில் வெளியான “அவள் வருவாளா” திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

ரொமான்டிக் திரில்லர்

1998 ஆம் ஆண்டு அஜித்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான “அவள் வருவாளா” திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகின்றன. இந்த திரைப்படத்தில் சுஜாதா, பிரித்விராஜ், கவுண்டமணி, செந்தில், கோவை சரளா, வெண்ணிற ஆடை மூர்த்தி, கவுண்டமணி உள்ளிட்ட பலரும் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

சூப்பர் ஹிட் படம்

காமெடி ரொமான்டிக் திரில்லராக உருவாகியிருந்த இந்த திரைப்படத்தை ராஜ் கபூர் இயக்கியிருந்தார். 1997 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘பெள்ளி’ என்ற படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாக்கப்பட்டது. எஸ்.ஏ. ராஜ்குமார் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது.

25 ஆண்டுகள் நிறைவு

பேங்க் மேனேஜராக சென்னைக்கு வரும் அஜித், முதல் பார்வையிலே எந்த பெண்ணை பிடித்து போகிறதோ அவரை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற குறிக்கோளோடு இருக்கிறார். அந்த சமயத்தில் ஷாப்பிங் மாலில் திவ்யா (சிம்ரன்) சந்திக்கிறார். அவரை தேடி அலைந்து கண்டுபிடித்து அவர் வசிக்கும் காலனிலேயே வீடு வாடகைக்கு எடுத்து வந்து தங்குகிறார் அஜித். பலமுறை காதலை சொல்லியும் ஏற்றுக்கொள்ளாத சிம்ரனுக்கு சோகமான ஒரு பிளாஷ் பேக் ஸ்டோரி இருக்கின்றது. அது அனைத்தையும் தாண்டி சிம்ரன் அஜித்தை ஏற்றுக் கொண்டாரா? இல்லையா? இந்த படத்தின் வில்லன் யார்? என்பதை இயக்குநர் அடுத்தடுத்த டுவிஸ்ட்களுடன் கூறியிருக்கும் விதம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. அஜித் மற்றும் சிம்ரனின் சினிமா கேரியருக்கு இந்த திரைப்படம் முக்கிய திரைப்படமாகவே அமைந்தது. இந்த திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த மிகப்பெரிய வெற்றியை அஜித் மற்றும் சிம்ரன் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here