ருத்ரன் படத்தின் பாடலுக்கு நடனமாடிய நடன கலைஞர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் இழுத்தடிப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கலவையான விமர்சனம்

ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ், நாசர், சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ருத்ரன் திரைப்படம், தமிழ் புத்தாண்டு அன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் வில்லனாக நடித்திருந்த சரத்குமார் நடிப்பு அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது. ஃபைவ் ஸ்டார் தயாரிப்பாளர் கதிரேசன் படத்தை இயக்கியிருந்தார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்த இந்த திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாய் என்ற பாடல் சோசியல் மீடியாக்களில் டிரெண்ட் ஆகின.

சம்பளம் கொடுக்கவில்லை

இந்நிலையில், ருத்ரன் படத்தின் பாடலுக்கு நடனம் ஆடிய கலைஞர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் இழுத்தடிப்பதாக சென்னை வடபழனி காவல் நிலையத்தில் நடன அமைப்பாளர் ராஜ் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், ருத்ரன் படத்தின் கிளைமாக்ஸ் பாடலுக்கு நடனமாட கலைஞர்களை ஏற்பாடு செய்து கொடுத்தேன். படப்பிடிப்பு முடிந்து பல நாட்கள் ஆகியும் அவர்களுக்கான சம்பளம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து ஏஜென்ட் ஸ்ரீதரிடம் கேட்டதற்கு, இப்போது.. அப்போது.. என இழுத்தடித்து வருகிறார். எங்களுக்கு வாடகை கொடுக்கக்கூட வழியில்லாமல் தவித்துக் கொண்டிருக்கின்றோம். இதுகுறித்து திரைப்படத்தின் மேலாளரிடம் பேசினேன். அவர் கடுமையாக நடந்துகொண்டார். தொடர்ந்து பெஃப்சி அலுவலகத்திலும் புகார் கொடுத்துள்ளேன். ஆனால் எந்த பலனும் இல்லை. அதனால் தகுந்த நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை பெற்றுத் தர வேண்டும்” என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here