ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் “ஃபர்ஹானா” படத்திற்கு நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம்

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கக்கூடிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், சமீப காலமாக ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் அனைத்து படங்களும் நல்ல விமர்சனங்களை பெற்றதால் தற்போது “ஃபர்ஹானா” திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

கிளம்பிய சர்ச்சை

ஃபர்ஹானா படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து ஜித்தன் ரமேஷ், செல்வராகவன், ஐஸ்வர்யா தத்தா, அனுமோல் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை, ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. சமீபத்தில் வெளியான காஷ்மீரி பைல்ஸ், கேரளா ஸ்டோரி உள்ளிட்ட திரைப்படங்கள் மத சம்பந்தப்பட்ட சர்ச்சைகளை ஏற்படுத்தியதால், இந்த படத்திற்கும் ஆரம்பத்தில் சில சர்ச்சைகள் நிலவி வந்தது.

வாழ்த்திய சூர்யா

இந்தத் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் இஸ்லாமிய பெண்ணாக நடித்துள்ளதால் மத சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை உருவாக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில், இந்த திரைப்படம் மத உணர்வுகளுக்கு எதிரானது இல்லை என படக்குழு அறிக்கை வெளியிட்டது. மேலும் இப்படம் குறித்து ஒரு சிலர் உருவாக்கும் சர்ச்சைகள் வேதனையை தருவதாகவும், கண்டிப்பாக இந்த திரைப்படத்தை தமிழ் ரசிகர்கள் ஆதரிப்பார்கள் என நம்புவதாகவும் படக்குழு அறிவித்திருந்தனர். இந்நிலையில் ஃபர்ஹானா படத்திற்கு நடிகர் சூர்யா தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்; “படத்தைப் பற்றி நல்ல விஷயங்களை கேள்வி படுகிறேன். அனைவராலும் விரும்பப்படும் படமாக இந்த ஃபர்ஹானா திரைப்படம் மாறட்டும்” என்று தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here