சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடிய நடிகர் ஷாருக் கான் நயன்தாராவை பற்றி புட்டு புட்டு வைத்துள்ளார்.

ரசிகர்கள் ஆவல்

பதான் படத்தின் வெற்றிக்குப் பிறகு அட்லீ இயக்கும் “ஜவான்” படத்தில் நடித்து வருகிறார் நடிகர் ஷாருக் கான். இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். விஜய் சேதுபதி வில்லனாக மிரட்டியுள்ளார். ஆரம்பத்தில் இருந்தே இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தமிழில் சூப்பர் ஸ்டார் ஆக இருக்கக்கூடிய நயன்தாரா, ஹிந்தியில் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுடன் இணைந்து நடித்த திரைப்படம் எப்படி இருக்கும் என்று பார்க்க ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். ‘ஜவான்’ படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்த நிலையில், போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் 7ஆம் தேதி இப்படம் உலக அளவில் வெளியாக போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் பாடல் காட்சி இன்டர்நெட்டில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

அதிகரித்த எதிர்பார்ப்பு

சமீபத்தில் நடிகர் ஷாருக் கான் ரசிகர்களுடன் சமூக வலைதளத்தில் உரையாடினார். அப்போது பேசிய அவர், “நயன்தாரா இனிமையானவர் மற்றும் மிகப்பெரிய அழகி, அவரோடு இணைந்து நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நடிகர் விஜய் சேதுபதி திறமையான நடிகர். அடக்கமானவர் அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது. ஜவான் திரைப்படம் மிக அருமையாக வந்துள்ளது” என்று கூறியுள்ளார். ஷாருக் கான் பேசியதை கேட்டதற்கு பிறகு ஜவான் படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here