ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க தொடரின் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

பஞ்சாயத்தில் ரங்கநாயகி

இன்றைய எபிசோடில் மது அருந்தி விட்டு வந்த வெற்றிக்கு சக்தி சாப்பாடு ஊட்டி விடுகிறார். ஆனால் அவர் சாப்பிடாமல் துப்பிவிடுகிறார், சக்தி சென்றதும் அமைதியாக சாப்பிடுகிறார். அதை மறைந்திருந்து பார்க்கும் சக்தி, சிரித்து விட்டு செல்கிறார். அதற்குப் பிறகு வீட்டிற்கு வெளியே நின்று சரண்யா, ரங்கநாயகியை பஞ்சாயத்துக்கு அழைக்கிறார். உன்னால் தான் இந்த பிரச்சனை என்று சொல்லும் வகையில் சக்தியை முறைத்து விட்டு ரங்கநாயகி பஞ்சாயத்துக்கு புறப்படுகிறார்.

டிஎன்ஏ டெஸ்ட்

பஞ்சாயத்தில் அசோக்கின் அம்மா, சரண்யா வயிற்றில் வளர்வது அசோக்கின் குழந்தை இல்லை, வெற்றி மிரட்டியதால் தான் அசோக் அப்படி சொல்கிறான் என்ற சொல்லிதுடன், சக்தியை கோவிலில் வைத்து சரண்யாவும் சந்திக்கவில்லை என்று தன்னிடம் சொன்னதாக கூறுகிறார். ஆனால் சக்திக்கு ரங்கநாயகி டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க சொன்னது போல, சரண்யாவுக்கும் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று சொல்கிறார். வெற்றி மற்றும் ரங்கநாயகி இருவரும் சக்தியை கோபத்துடன் முறைத்து பார்க்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அடுத்து என்ன நடக்கப்போவது என்பது அடுத்து எபிசோடில் தெரிய வரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here