நடிகை ஆலியா மானசா தனது கணவர் சஞ்சீவ் மீது காதல் வந்ததற்கான காரணத்தை கூறியுள்ளார்.

பிஸியான ஜோடி

நடிகர் சஞ்சீவ், நடிகை ஆலியா மானசா ஆகியோர் ராஜா ராணி தொடரில் ஜோடியாக நடித்து, நிஜத்தில் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். விஜய் டிவியில் பிஸியாக இருந்து வந்த நடிகை ஆலியா மானசா, குழந்தை பிறப்புக்கு பிறகு சன் டிவிக்கு மாறிவிட்டார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா தொடரில் நடித்து வருகிறார் ஆலியா. இரு குழந்தைகளுக்கு தாயான ஆலியா மானசா, சீரியலில் நடிப்பதில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

இது தான் காரணம்

சன் டிவி ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரில் ஹீரோவாக சஞ்சீவ் நடித்து வருகிறார். எப்பொழுதும் சமூக வலைதளத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ஆக்டிவாக இருக்கும் இந்த ஜோடிக்கு, ஏராளமான ரசிகர்கள் உண்டு. இந்நிலையில் கணவர் சஞ்சீவ் மீது தனக்கு எப்படி காதல் வந்தது என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் ஆலியா. ஈதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது; “நான் சீரியலில் நடிக்க சஞ்சீவ் உடன் கமிட்டான போது, அவரை பார்த்ததும் எனக்குள் ஒரு ஈர்ப்பு வந்தது. பின்னர் நாளடைவில் அவருடன் ஏற்பட்ட புரிதல், விட்டுக் கொடுக்கும் தன்மை பார்த்து காதல் மலர்ந்தது” என தெரிவித்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here