நடிகர் பிரசன்னா திருமண நாள் பரிசாக தனது மனைவி ஸ்னேகாவுக்கு ரொமான்டிக் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

நட்சத்திர ஜோடி

தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக இருந்து வருபவர்கள் பிரசன்னா – சினேகா ஜோடி. முன்னணி நடிகர்களாக இருந்த இவர்கள் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். 2009 ஆம் ஆண்டு வெளியான அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்த போது இருவர்களுக்கும் காதல் மலர்ந்தது. ஆரம்பத்தில் இவர்களின் காதல் கிசுகிசுவாக வெளிவந்தது. அதன்பிறகு, தங்களது காதலை வெளிப்படையாக சொல்லி மே 11ஆம் தேதி 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் சினேகா – பிரசன்னா ஜோடிக்கு, 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று தங்களது திருமண நாளை கொண்டாடிய இவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வந்தனர்.

காதலை சொன்ன பிரசன்னா

திருமண நாள் பரிசாக தனது மனைவிக்கு ரொமான்டிக்காக காதலை சொல்லும் வகையில் பதிவு ஒன்றே வெளியிட்டுள்ளார் நடிகர் பிரசன்னா. ாந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது; “ஏய் பொண்டாட்டி, இந்த சிறப்பான நாளில் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். என் வாழ்க்கையில் பல சிறப்புகள் இருந்தாலும், உன் கையை பிடித்த பிறகு நிறைய கற்றுக்கொண்டேன். உன்னுடன் பயணிக்கும் இந்த நாளுக்காக நன்றியுடன் இருப்பேன். பல்வேறு கஷ்டங்களையும், சவால்களையும் சந்தித்திருக்கிறேன். அப்போதெல்லாம் நீ என் அருகில் இருந்ததால் எந்த கஷ்டமும் என்னை எதுவும் செய்யவில்லை. உனது அன்பு என்னை வழிநடத்தி செல்கிறது. உண்னை எனது துணையாக பெற்றதற்கு என்றும் நன்றி உள்ளவனாக நான் இருப்பேன். நம்முடைய பிள்ளைகள் விலை மதிப்பற்ற பரிசுகள். எந்த சூழ்நிலையிலும் என்னை விட்டுக் கொடுக்காத அன்பு என்னை நெகிழ வைக்கிறது. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அன்பே. ஒவ்வொரு நொடியும் நாம் சிறப்பாக வாழ்வோம். உன்னை எப்போதும் நான் காதலிக்கிறேன். நம்முடைய காதல் உயர்ந்ததாக இருக்கும். நம்மை சூழ்ந்த மில்லியன் கணக்கான வதந்திகள் தவுடு பொடியாகட்டும். நம்முடைய வாழ்க்கையை முழுமையாக வாழ்வோம்” என்று பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here