இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியான பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

மொத்த வசூல்

கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம் உலக அளவில் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து பிரம்மாண்ட சாதனை படைத்தது. இந்நிலையில் சமீபத்தில் வெளியான இப்படத்தின் இரண்டாம் பாகம் ரூ.300 கோடிகளுக்கும் அதிகமாக வசூலை ஈட்டி உள்ளது. சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என பல நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்த இந்த திரைப்படத்திற்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் பல காட்சிகள் நாவலில் இருப்பது போல் இல்லாமல் மணிரத்னம் மாற்றிவிட்டதாக பலர் தங்களது அதிருப்தியையும் வெளிப்படுத்தி இருந்தனர்.

பாடல்கள் ட்ரா பேக்

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது. ஆனால் பாகம் இரண்டில் பாடல்கள் அதிக அளவில் இல்லாததால் பெரிய ட்ரா பேக் என்றே கூறப்படுகின்றது. இளங்கோ கிருஷ்ணனின் பாடல்கள் இதுவரை இல்லாத அளவுக்கு ஆடியோ உரிமம் அதிகமாக அளவில் விற்பனை ஆகி உள்ளதாகவும் கூறுகின்றனர்.

கம்மி வசூல்

பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ் ஆகி 13 நாட்கள் ஆகும் நிலையில், இதுவரை இந்தியாவில் ரூ.170 கோடி வசூலும், உலக அளவில் ரூ.320 கோடி வசூலும் பெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மொத்தத்தில் ரூ.300 கோடி வசூல் வரை ஈட்டி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. முதல் பாகத்தை விட இந்த இரண்டாம் பாகம் கம்மி வசூல் பெற்றுள்ளதால் படக் குழுவினரும் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறுகின்றனர். மொத்தமாக ஒரு ரூ.400 கோடி வசூலை ஆவது நெருங்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here