திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்தியது தான் நான் என் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு என்று நடிகை சீதா கூறியுள்ளார்.

பிரிந்த சீதா

நடிகரும், இயக்குநருமான பார்த்திபனின் முன்னாள் மனைவி சீதா, 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். ஆண்பாவம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர், அடுத்தடுத்து பல ஹிட் படங்களை கொடுத்தார். டாப் நடிகையாக முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்த சீதா, திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டார்.

மிகப்பெரிய தவறு

1989 ஆம் ஆண்டு பார்த்திபனும் சீதாவும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன்பிறகு மீண்டும் நடிக்க வந்த சீதா, சீரியல் நடிகரான சதீஷ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணமும் சீதாவிற்கு நிலைக்காமல் விவாகரத்து பெற்றார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், தனது சினிமா வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். இதுகுறித்து நடிகை சீதா கூறியிருப்பதாவது; “யாராக இருந்தாலும் அவர்களுக்கு என்று ஒரு அடையாளம் வேண்டும். அந்த அடையாளம் இருக்கும் இடத்திலிருந்து நாம் விலகிப் போனால், பிறகு அந்த இடத்தை பிடிப்பது மிகவும் கஷ்டம். திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்தியது எனது வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு” என்று வருத்தமாக கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here