சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “கயல்” தொடர் 500 எபிசோடுகளை கடந்துள்ளது.

வெற்றி கொண்டாட்டம்

சன் டிவியில் பல தொடர்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் கயல் தொடருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. டி ஆர் பியிலும் இந்த தொடர் முதல் இடத்தை பிடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரசிகர்களின் பேராதரவோடு இந்த தொடர் 500 எபிசோடுகளை நிறைவு செய்துள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து மே 14ஆம் தேதி ஒரு மணி நேர சிறப்பு எபிசோடாக ஒளிபரப்பப்படுகிறது.

சந்தோஷத்தில் சீரியல் குழுவினர்

இந்த வெற்றி குறித்து இந்த தொடரில் ஹீரோயினாக நடித்து வரும் சைத்ரா ரெட்டி கூறுகையில்”கயல் புதிய மைல்கல்லை எட்டியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். சீரியலின் முழுமையான பயணம் எனது கேரியருக்கு உயிர் கொடுத்தது” என்று கூறியுள்ளார். மேலும் இந்த தொடரில் ஹீரோவாக நடித்து வரும் சஞ்சீவ் கார்த்திக் கூறுகையில்”கயல் போன்ற அருமையான சீரியலில் நான் பங்கு பெற்றதில் பெருமை அடைகிறேன். 500-வது எபிசோடை எட்டியதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எனது இயக்குனர்கள் பி.செல்வம் மற்றும் வைதேகி ராமமூர்த்திக்கு எனது சிறப்பு நன்றி” என்று கூறியுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் கோபி, ஐஸ்வர்யா ரவிச்சந்திரன், மீனாகுமாரி, அய்யப்பன், ஹேமா ஸ்ரீகாந்த், அபினவ்யா தீபக், ஜானகி தேவி, ராஜேஷ், தெசினா, முரளிதர் ராஜ், சுமங்கலி, ஃபவாஸ் ஜயானி, கிரண் மாய், ஹென்ஷா தீபன், ஜெகநாதன்உள்ளிட்ட பலர் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here