நடிகை சாய் பல்லவி இன்று தனது 30வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

நேச்சுரல் பியூட்டி

1992 ஆம் ஆண்டு மே 9ஆம் தேதி பிறந்த சாய் பல்லவி, இன்று தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான “உங்களில் யார் அடுத்த பிரபுதேவா” என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் சினிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தார். தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வரும் நடிகை சாய் பல்லவி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் இவர் நடித்த சில படங்கள் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் இவரது ரவுடி பேபி பாடல் இன்றும் யூடியூப் ரெண்டாகவே இருந்து வருகிறது. அதிக மேக்கப் இல்லாமல் நேச்சுரல் பியூட்டி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை சாய் பல்லவி ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்திலேயே நடித்து வருகிறார். அதுவும் கவர்ச்சி இல்லாத கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இதுவரை கிட்டத்தட்ட15 பாடங்களில் நடித்துள்ள நடிகை சாய் பல்லவி, ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து sk21 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. கண்டிப்பாக தமிழில் இந்த படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடிகை சாய் பல்லவி இன்று தனது 30வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை சாய் பல்லவிக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என்று அனைவரும் சமூக வலைதளத்தின் மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here