நடிகை தமன்னா நடிப்பில் உருவாகி வரும் ரஜினியுடன் ஜெயிலர், சிரஞ்சீவியுடன் போலா சங்கர் ஆகிய படங்கள் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது.

முத்திரை பதித்த நடிகை

கேடி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமான நடிகை தமன்னா, வியாபாரி, கல்லூரி, அயன் போன்ற பல ஹிட் படங்களை கொடுத்தார். அதிலும் இவர் நடித்த கல்லூரி திரைப்படம் மிகப்பெரிய ஹிட் பெற்றது. அதன்பிறகு முன்னணி நடிகர்களுடன் நடிக்க துவங்கினார். படிக்காதவன், பையா, சுறா போன்ற படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். சூர்யா, விஜய், தனுஷ், கார்த்தி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த தமன்னா, தற்போது சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழியிலும் முத்திரை பதித்திருக்கும் நடிகை தமன்னா, சிரஞ்சீவிக்கு கோடியாக போலா ஷங்கர் என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். ஜெயிலர், போலா சங்கர் ஆகிய இரண்டு படங்களும் ஒரு நாள் இடைவெளியில் வெளிவர இருக்கிறது.

சந்தோஷமா இருக்கு!

இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகை தமன்னா பகிர்ந்துள்ளதாவது; “திரையுலகின் இரண்டு சூப்பர் ஸ்டார்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி ஆகியஓருடன் இணைந்து நான் நடித்துள்ள படங்கள் ஒரே நேரத்தில் வெளியாவது மகிழ்ச்சி அளிக்கிறது. பெரும்பாலும் ஹீரோக்கள் நடித்த படங்கள் அடுத்தடுத்த நாட்களில் வெளியாவது அடிக்கடி நடந்துள்ளது. ஆனால் ஹீரோயின்களுக்கு அது அரிது. எனக்கு இப்போது இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. ரஜினியுடன் தமிழில் நடித்த ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதியும், சிரஞ்சீவியுடன் நடித்த போலா சங்கர் ஆகஸ்ட் 11 ஆம் தேதியும் வெளியாக இருக்கிறது” என்று தமன்னா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here