ஆண்டுதோறும் விருதுகள் வென்ற தனக்கு இந்த ஆண்டு விருது வழங்கும் விழாவுக்கு அழைப்புக்கூட வரவில்லை என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

சம்பந்தம் இல்லை

‘பர்ஹானா’ திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பங்கேற்று பேசுகையில்; வாரந்தோறும் என்னுடைய படங்கள் வெளியாகிறது என்கிறார்கள். படம் வெளியாவதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

வருத்தம்

கடந்த ஆண்டு எனது படங்கள் இரண்டு மட்டும் தான் வெளியானது. அதனால் இந்த ஆண்டும் எனது படத்திற்கு எந்த விருதும் கிடைக்கவில்லை. ஆண்டுதோறும் பல விருதுகள் வென்ற தனக்கு இந்த ஆண்டு விருது வழங்கும் விழாவுக்கு அழைப்புக்கூட வரவில்லை. க/பெ. ரணசிங்கம் படத்திற்கு அங்கீகாரம் கிடைக்காதது எனக்கு வருத்தமே”. இவ்வாறு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here