நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாக உள்ள பர்ஹானா பட ப்ரொமோஷன் நேர்காணலின் போது அவர் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

பெண்களுக்கு முக்கியத்துவம்

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கக்கூடிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், சமீப காலமாக ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன், சொப்பன சுந்தரி உள்ளிட்ட அனைத்து படங்களும் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக அமைந்துள்ளது. தற்போது இவரது நடிப்பில் “பர்ஹானா” எனும் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுத்த பேட்டியில் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து உள்ளார்.

நிறைவேறாத ஆசை

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறி இருப்பதாவது, “எனக்கும் ஹீரோ கூட டூயட் பாடுகிற படங்கள், காமெடி மசாலா படங்கள் பண்ண ஆசை. ஆனால் என்னை அதுபோல் கதாபாத்திரத்திற்கு கூப்பிடுவதில்லை. கதைகளுக்கும், கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை மட்டுமே என்னை நடிக்க கேட்கிறார்கள். அந்த வகையில் தற்போது நடித்திருக்கும் பர்ஹானா திரைப்படம் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கிறேன். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நிறைய படங்கள் வரவேண்டும். நான் மட்டுமல்ல நயன்தாரா, திரிஷா, சாய் பல்லவி என அனைவரும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் சிறப்பாகவே நடிக்கிறார்கள். இப்போதைக்கு காதல், கல்யாணம் எல்லாமே சினிமா மட்டும் தான். மக்களுக்கு பிடித்த மாதிரி நல்ல படங்கள் நடிக்க ஆசை”. இவ்வாறு ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here