தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸியாக இருந்து வரும் நடிகை ராய் லட்சுமி இன்று 34 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
கவர்ச்சி நடிகை
2005 ஆம் ஆண்டு கற்க கசடற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி. அதன்பிறகு குண்டக்க மண்டக்க, தர்மபுரி, தாம் தூம், வாமணன், நான் அவன் இல்லை 2 உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ராய் லட்சுமி 15 ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்தும், தமிழில் முன்னணி நடிகையாக வர இன்னும் போராடிக் கொண்டுதான் இருக்கிறார். தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று பல மொழிகளிலும் நடித்து வருகிறார் ராய் லட்சுமி. மலையாளத்தில் மோகன்லால் மற்றும் மம்முட்டிக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார். இத்தனை ஆண்டுகளாக வெறும் கவர்ச்சி நடிகையாகவே இருந்து வரும் நடிகை ராய் லட்சுமி, சமீபத்தில்கூட கைதி படத்தின் ஹிந்தி ரீமேக்கான போலா படத்தில் கவர்ச்சியாக நடனம் ஆடியிருந்தார்.
பிறந்தநாள் கொண்டாட்டம்
15 ஆண்டுகளாக கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த ராய் லட்சுமி, தற்போது முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் தயாராகி வரும் ‘டிஎன்ஏ’ என்கின்ற திரைப்படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் ராய் லட்சுமி. இந்தப் படத்தை டி.எஸ். சுரேஷ்பாபு இயக்குகிறார். சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லராக உருவாகும் இதில், அஸ்கர் ஹீரோவாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. எப்பொழுதும் சமூக வலைதளங்களில் பிஸியாக இருந்து வரும் ராய் லட்சுமி, இன்று பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களையும், வீடியோக்களையும் இன்ஸ்டாவில் ஷேர் செய்து உள்ளார். அவர் பதிவிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.