நடிகை ராஷ்மிகா மந்தனாவை காதலிப்பதாக வெளியான வதந்திக்கு நடிகர் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் விளக்கம் அளித்துள்ளார்.
கலவையான விமர்சனம்
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. தமிழில் சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் எதிர்பார்த்த அளவு அந்த திரைப்படம் வெற்றி பெறவில்லை. அதன்பிறகு தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பிஸியாக இருந்து வந்த ராஷ்மிகா, புஷ்பா படத்தில் நடித்து சூப்பர்ஹிட் கொடுத்தார். பின்னர் விஜய்க்கு ஜோடியாக வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது.
காதல் ஜோடி
நடிகை ராஷ்மிகா மந்தனா பற்றி அடிக்கடி பல காதல் கிசுகிசுக்கள் வெளிவருகின்றன. ஏற்கனவே விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த சமயத்தில் அவருடன் காதலில் இருப்பதாக செய்திகள் வெளியாகின. அதன்பிறகு இளம் கிரிக்கெட் வீரரான சுப்மன் கீலை காதலிப்பதாக தகவல் வெளிவந்தது. சில தினங்களுக்கு முன் மும்பை விமான நிலையத்தில் தெலுங்கு நடிகரான பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸும், ராஷ்மிகாவும் ஜோடியாக வந்தார்கள். இதனை பார்த்தவுடன் இருவரும் காதலிப்பதாக மீடியாக்களும், நெட்டிசன்களும் கூறிவந்தனர். இந்நிலையில் மீண்டும் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸும், ராஷ்மிகாவும் ஜோடியாக கேமராவில் சிக்கிவிட்டனர். அதனால் அடிக்கடி இருவரும் வெளியே செல்வதாக ரசிகர்கள் தகவலை பரப்பி வந்தனர். இந்த செய்தி பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் காதுகளில் பட, அதற்கு அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
விளக்கம்
பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் கொடுத்துள்ள விளக்கத்தில், “இதுபோன்ற வதந்தி எப்படி வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. இது முற்றிலும் ஆதாரமற்றது. ஏனென்றால் நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்தோம். நாங்கள் உண்மையில் விமான நிலையத்தில் திடீரென ஒருவரையொருவர் சந்தித்துக்கொண்டோம். நாங்கள் இருவரும் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள். நாங்கள் மும்பையில் இருந்து இங்கு தொடர்ந்து வருகிறோம். எனவே, ஒருவருக்கொருவர் அடிக்கடி சந்தித்துக்கொள்வது போன்று உள்ளது. ஆனால் விமான நிலையத்தில் இருந்து வெளியே வருவதை, அவர்கள் ஓரிரு முறை பார்த்திருக்ககூட வாய்ப்பில்லை. இந்த விஷயம் இவ்வளவுதான்” என்று கூறி தனது காதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் .