சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரின் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது.

பரபரப்பான திருப்பம்

சன் டிவியில் பல தொடர்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் எதிர்நீச்சல் தொடருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தினம் தினம் பல திருப்பங்களும், பல சுவாரசியமான சம்பவங்களுடன் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்கும் தொடராக இருக்கிறது இந்நிலையில் இன்றைய எபிசோடின் ப்ரோமோ அனல் பறக்கும் விதமாக வெளியாகி உள்ளது.

வெளியே தள்ளும் கதிர்

இன்றைய எபிசோடில் குணசேகரனை பார்த்து சக்தி, அப்பத்தாவை நான் பார்த்துக் கொள்கிறேன் எனக்கு உரிமை இருக்கு என்று சொல்கிறார். இதுவரைக்கும் அந்த அப்பத்தாவுக்கு நீங்க என்னடா பண்ணி இருக்கீங்க? என சக்தி கேட்க, பதிலுக்கு நீங்க என்ன பண்ணீங்க என திரும்பி கேட்கிறார். அதன் பிறகு ஜனனி அப்பத்தாவை நான் பார்த்தே ஆகணும் முடியுமா? முடியாதா? என்று கேட்ட முடியாது என்று சொல்லி ஜனனியை இழுத்து வெளியே தள்ளுகிறார் கதிர். இதனால் குணசேகரன் வீடு பெரும் கலவரமாக மாறுகிறது. இந்த ப்ரோமோ தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here