கையில் பணம் இல்லாததால் கார், பைக்கை விற்று உள்ளார் நடிகர் கௌதம் கார்த்திக்.

போராடும் நடிகர்

கடல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கௌதம் கார்த்திக். அதன்பிறகு என்னமோ ஏதோ, வை ராஜா வை, முத்துராமலிங்கம், ரங்கூன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. சமீபத்தில் பத்து தல திரைப்படத்தில் நடித்திருந்தார். முன்னணி நடிகரின் மகனாகவே இருந்தாலும், சினிமாவில் ஜெயிக்க போராடிக் கொண்டுதான் இருக்கிறார் கௌதம் கார்த்திக். சினிமாவுக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆன பிறகும் தனக்கேற்ற வெற்றிக்காக போராடிக் கொண்டிருக்கும் கௌதம் கார்த்திக், கடந்த ஆண்டு நடிகை மஞ்சிமா மோகனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

கார் பைக் விற்றுவிட்டேன்

இந்நிலையில் தன் வாழ்க்கையில் நடந்த சில சுவாரஸ்யமான விஷயங்களை அவர் பகிர்ந்துள்ளார். கௌதம் கார்த்திக்கு கடன் வாங்குவது பிடிக்காதாம், சொந்த காலிலே நிற்க வேண்டும் என மன உறுதி படைத்தவராம். தனது திருமணத்திற்கான செலவுகளை கூட அவரே பார்த்துக் கொண்டதாகவும், கொரோனா கால கட்டத்தில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத சமயத்தில் பைக், கார்ககளை விற்று தான் வாழ்க்கையை நடத்தினார் என்றும் அந்த சமயத்தில் கூட மனைவி மஞ்சிமா தான் தனக்கு உறுதுணையாக இருந்ததாகவும் தனது மனைவியை பற்றி கூறியிருக்கிறார் கௌதம் கார்த்திக்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here