அமுதாவும் அன்னலட்சுமியும் தொடரில் இன்றைய எபிசோட் அப்டேட்டை இந்த பதிவில் பார்க்கலாம்.

பள்ளிக்கூடம் யாருக்கு

ஜீ தமிழில் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் அமுதாவும் அன்னலட்சுமியும் தொடர், தற்போது பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த தொடரில் இன்றைய எபிசோடில் கரஸ் அனைவரிடமும் “இந்த பள்ளிக்கூடம் குமரேசன் மற்றும் கதிரேசன் குடும்பத்திற்கு பதியப்பட்டது. அவங்க தாத்தாவோட உயில்படி யார் வாத்தியாராக ஆக்குறாங்களோ அவங்களுக்கு தான் இந்த பள்ளிக்கூடம் சொந்தம்” என கூறுகிறார். அதன்பிறகு உமா எழுந்து நின்று தனது சர்டிபிகேட்டை கொடுக்க, கரஸ் உமா இந்த பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக சேர்ந்து கொள்ளப்படுவதாக அறிவிக்கிறார். அது மட்டுமில்லாமல் குமரேசனிடம் இந்த பள்ளிக்கூடத்தை நிர்வகிக்கிற பொறுப்பை ஒப்படைப்பதாக கூறுகிறார். இதனால் ஷாக்கான அமுதா இதனை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்.

பொறுப்பேற்கும் செந்தில்

இந்நிலையில் கையெழுத்து போடும் சமயத்தில் பேப்பர் பறந்து போக, அந்த பேப்பர் செந்தில் கால்களில் விழுகிறது. பேப்பரை எடுத்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தவுடன் அனைவரும் ஷாக் ஆகின்றனர். உடனே செல்வராஜ், “ஐயா இவர் பெயர் செந்தில் இரண்டு வருஷமா சென்னையில பி.எட் படிச்சிட்டு வந்திருக்காரு” என கூறுகிறார். உடனே எங்க சைடும் வாத்தியார் இருக்கிறார் என்று அமுதா சொல்கிறார். அதன்பிறகு செந்தில் ஆசிரியராக பொறுப்பேறுகிறார். அடுத்து இந்த தொடரில் என்ன நடக்கப்போகிறது என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here