தமிழும் சரஸ்வதியும் தொடரிலிருந்து வசு கதாபாத்திரத்தில் நடிக்கும் தர்ஷனா சீரியலை விட்டு விலகப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

சூழ்ச்சி மாப்பிள்ளை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதில் தீபக், நட்சத்திரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த தொடரில் தீபக் தனது அம்மாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வீட்டை விட்டு வெளியே வந்து தனியாக கம்பெனி தொடங்குகிறார். கம்பெனிக்கு சரஸ்வதி என்று தனது மனைவி பெயரை வைக்கிறார். இவரது கம்பெனிக்கு லாஸ் ஏற்படுத்த பல சூழ்ச்சி வேலைகளை ராகினியின் கணவர் அர்ஜுன் செய்கிறார்.

விலகும் தர்ஷனா

கர்ப்பமாக இருக்கும் வசுவை வீட்டில் தனியாக விட்டு விட்டு, அவரவர் வெளியே சென்று விடுகின்றனர். இந்நிலையில் கர்ப்பமாக இருக்கும் வசு மாடி படிகளில் இருந்து கீழே விழுகிறார். அவரை சரஸ்வதி சென்று காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்து, அவருக்கு தேவையான ரத்தத்தையும் சரஸ்வதியே கொடுக்கிறார். இதனால் குழந்தையும் வசுவும் உயிர் பிழைக்கின்றனர். எப்பொழுதும் பாசிட்டிவ் ஆகவும் இருக்கக்கூடிய வசுவின் கேரக்டர் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இந்த தொடரிலேயே தமிழுக்கும் சரஸ்வதிக்கும் சப்போர்ட் செய்யும் முக்கிய கதாபாத்திரத்தில் வசு நடித்து வருகிறார். இந்நிலையில் வசு இந்த தொடரை விட்டு விலகுவதாக கூறியுள்ளார். சின்னத்திரை ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற தர்ஷனா (வசு) இந்த தொடரை விட்டு விலகுவது ரசிகர்களுக்கு பெரும் இழப்பாகவே உள்ளது. இவருக்கு பதிலாக யார் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என்று பெரும் ஆவல் நிலவி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here