முதல்முறை நல்ல கதாபாத்திரத்திரம் உள்ள படத்தில் நடிக்கிறேன் என்று நடிகை நிதி அகர்வால் கூறி உள்ளார்.

கவர்ச்சியாக நடித்தேன்

சிம்புக்கு ஜோடியாக நடித்து ஈஸ்வரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை நிதி அகர்வால். உதயநிதி ஸ்டாலினுடன் கலகத் தலைவன் படத்திலும் நடித்திருந்தார். தற்போது தெலுங்கு மற்றும் தமிழில் கவனம் செலுத்தி வரும் நடிகை நிதி, சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது; “நான் இதுவரை கவர்ச்சியான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்திருக்கிறேன். முதல் முதலாக பவன் கல்யாணுக்கு ஜோடியாக “ஹர ஹர வீர மல்லு”என்ற தெலுங்கு படத்தில் நல்ல கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.

சிறந்த படம்

எனது சினிமா வாழ்க்கையில் “ஹர ஹர வீர மல்லு” ஒரு முக்கியமான படமாக இருக்கும். என் அழகில் கவனம் செலுத்துவது மட்டும் இல்லாமல், நடிப்பிலும் புதிய விஷயங்களை கற்றுக் கொண்டு வருகிறேன். நான் மட்டுமல்ல, நடிப்பு விஷயங்களை முழுமையாக அறிந்தவர்கள் யாருமே இல்லை. கதாபாத்திரத்தை புரிந்து கொண்டு நடிக்க வேண்டும் என்பதில் நான் முழு கவனமாக இருக்கிறேன். அதேபோல் திறமையான இயக்குநர் படங்களில் நடிக்கவும் ஆசை உள்ளது. திரைப்படங்களை பார்த்தும், ஓடிடியில் வரும் வெப் தொடர்களை பார்த்து என்னை நான் சிறந்த நடிகை ஆக என்னை மெருகேற்றி வருகிறேன்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here