சீரியல் நடிகரான மதன் பாண்டியன் தனது மனைவி ரேஷ்மாவுக்கு ரொமான்டிக்காக பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.

காதல் திருமணம்

நடிகை ரேஷ்மா முரளிதரன் அபி டெய்லர், ஆபீஸ், பூவே பூச்சூடவா மற்றும் தென்றல் உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமானவர். அவருடன் இணைந்து நடித்த மதன் பாண்டியன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர் கனா காணும் காலங்கள், கல்லூரியின் கதை, பூவே பூச்சூடவா உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அன்பானவன் அசராதவன் அடங்காதவன், டான் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார். காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்கள், சின்னத்திரையில் பிரபலமான ஜோடியாக வலம் வருகிறார்கள்.

குவியும் வாழ்த்துக்கள்

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர்கள், ஜோடியாக எடுக்கக் கூடிய புகைப்படங்களும், தங்களது போட்டோ சூட் புகைப்படங்களும் அடிக்கடி வெளியிட்டு வருவார்கள். இந்நிலையில் நேற்று பிறந்தநாள் கொண்டாடிய ரேஷ்மாவுக்கு ரொமான்டிக்காக பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார் கணவரான மதன் பாண்டியன். மனைவிக்கு கேக் ஊட்டும் புகைப்படத்துடன் அவர் பதிவிட்டு இருக்கும் பதிவில், “நான் எழுத்தாளராக இருக்கலாம், ஆனால் நீ தான் எப்பொழுதும் வார்த்தைகள். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார். அவரது பதிவிற்கு “நான் உருகிவிட்டேன்” என ரிப்ளை செய்துள்ளார் ரேஷ்மா. இவரது பிறந்தநாள் புகைப்படம் தற்போது அவரது ரசிகைகளால் பகிரப்பட்டு வருவதுடன், பிறந்தநாள் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here