தனது பெயரில் பண மோசடி நடப்பதாக நடிகை கோமல் சர்மா தனது ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கவர்ச்சி நடிகை

தமிழில் சட்டப்படி குற்றம் என்ற படத்தின் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமானவர் நடிகை கோமல் சர்மா. கவர்ச்சி நடிகையாக வலம் வரும் இவர், தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தனது பெயரில் பணமோசடி நடப்பதாக தனது ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் கோமல் ஷர்மா.

பண மோசடி

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் பெயரில் மோசடி நடப்பது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது; “அடையாளம் தெரியாத நபர் ஒருவர் போலியான போன் நம்பரை பதிவிட்டு என் பெயரில் பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார். அதில் பதிவிட்டு இருக்கும் நம்பர் என்னுடைய நம்பர் கிடையாது. அதனால் யாரும் இந்த மோசடியில் சிக்கிவிட வேண்டாம். நான் யாரிடமும் பணம் கேட்கவில்லை. என் பெயரை பயன்படுத்தி யாராவது பணம் கேட்டு மெசேஜ் அனுப்பினால் இதுகுறித்து உடனடியாக காவல்துறையிடம் புகார் அளிக்கவும்” என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு கோமல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here