நடிகை வனிதா விஜயகுமாரின் மூன்றாவது கணவரான பீட்டர் பால் திடீரென மரணம் அடைந்ததாக தகவல் வெளியாகி வருகிறது.

நீடிக்காத திருமணம்

நடிகை வனிதா விஜயகுமார் கோவிட் சமயத்தில் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் சினிமா வட்டாரத்திலும், சமூக வலைதளத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவரது திருமணம் குறித்து பல நடிகைகளும் சோசியல் மீடியாவில் விவாதம் செய்து வந்த நிலையில், அனைத்து பிரச்சினைகளையும் சமாளித்து வனிதா விஜயகுமார் பீட்டர் பாலுடன் சில நாட்கள் வாழ்ந்து வந்தார். ஆனால் இவரது திருமண வாழ்க்கை நீடிக்கவில்லை. இருவர்களுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பீட்டர் பால திடீரென விவாகரத்து செய்துவிட்டு பிரிந்து விட்டனர்.

சர்ச்சையான மரணம்

பீட்டர் பால் அதிகமாக மது அருந்துவதாகவும், அவரது கேரக்டர் சரியில்லை என்றும் வனிதா பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பீட்டர் பாலுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பீட்டர் பால் தற்போது உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இது குறித்து எந்த ஒரு செய்தியையும் நடிகை வனிதா விஜயகுமார் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. வெளிவந்திருக்கும் இவரது மரணச் செய்தி உண்மையா? இல்லையா? என்று வனிதாவை பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர். வனிதா விஜயகுமார் தற்போது பவர் ஸ்டாருடன் இணைந்து பிக்கப் டிராப் என்ற படத்திலும், அந்தகன் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here