நடிகை சமந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

தயாரிப்பாளர் விமர்சனம்

நடிகை சமந்தாவிற்கு சில மாதங்களுக்கு முன்பு மையோசிட்டிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்குப் பிறகு உடல்நலம் தேறிய சமந்தா, படங்களிலும், வெப் தொடர்களிலும் நடிப்பதில் கவனம் செலுத்தினார். சமந்தா நடித்த ஷாகுந்தலம் படம் சமீபத்தில் திரைக்கு வந்து படுதோல்வி அடைந்தது. வரலாற்று படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறும் என்று ஆர்வமாக இருந்த சமந்தாவிற்கு, இந்த படத்தின் தோல்வி அதிர்ச்சியாகவே அமைந்தது. அதுமட்டுமில்லாமல் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சிட்டிபாபு படத்தின் தோல்வியால் சமந்தாவின் சினிமா வாழ்க்கை ஒட்டுமொத்தமாக முடிந்துவிட்டதாகவும் விமர்சனம் செய்திருந்தார்.

மீண்டும் பிரச்சனை

இந்த நிலையில், நடிகை சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் மருத்துவமனையில் செயற்கை சுவாச கருவியுடன் சிகிச்சை பெரும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் சமந்தாவுக்கு என்ன ஆனது என்று பெரும் ஷாக்கில் உள்ளனர். சமந்தா தனது ஆரோக்கியத்தை பாதுகாக்க சுவாச கருவியுடன் ஹைபர் பேரிக் என்ற சிகிச்சையை மேற்கொண்டு வருவதாகவும் மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அடிக்கடி இந்த சிகிச்சை முறையை பின்பற்ற வேண்டும் என்றும் கூறப்படுகிறது. சமந்தாவிற்கு உடல்நிலை சரியில்லை என்று கட்டுக்கதை கட்டுகிறார் என்றும், தனது விளம்பரத்திற்காக இப்படி எல்லாம் நாடகமாடுகிறார்கள் என்றும் தயாரிப்பாளர் சிட்டுபாபு கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி அடிக்கடி மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வரும் சமந்தாவை, சிலர் விமர்சனம் செய்து வந்தாலும், அவர் உடல்நலம் பெற்று வர ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here