சன் டிவியில் ஒளிபரப்பாகும் வானத்தை போல தொடரில் இருந்து நடிகை தேப்ஜானி விலகியுள்ளார்.

நடிகர்கள் மாற்றம்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல தொடர் பல ரசிகர்களைக் கொண்டது. பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல தொடருக்கு பேமிலி ஆடியன்ஸ் அதிகம். இந்த தொடர் 2020 ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. அண்ணன் தங்கைகளின் பாசத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்த தொடரில் சின்ராசு என்ற கதாபாத்திரத்தில் தமன் நடித்து வந்தார். மேலும் துளசி என்ற கதாபாத்திரத்தில் ஸ்வேதாவும் நடித்து வந்தனர். இவர்கள் இருவரும் கடந்தாண்டு சீரியலை விட்டு விலகினர். தற்போது சின்ராசு கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ரீ குமாரும், துளசி என்ற கதாபாத்திரத்தில் மான்யா ஆனந்த் என்பவரும் நடித்து வருகின்றனர்.

விலகிய தேப்ஜானி

இந்நிலையில் தற்போது வானத்தைப்போல சீரியலில் இருந்து மேலும் ஒரு நடிகை விலகியுள்ளார். சந்தியா கேரக்டரில் நடித்து வந்த நடிகை தேப்ஜானி தற்போது சீரியலை விட்டு விலகி உள்ளார். குறிப்பிட்ட சில படங்களில் நடித்திருந்த நடிகை தேப்ஜானி சின்னத்திரையில் பிஸியாக இருந்து வருகிறார். தற்போது இவர் நடித்து வந்த சந்தியா கேரக்டரில் இருந்து இவர் விலகியதால் அந்த கேரக்டருக்கு நடிகை காயத்ரியை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்நிலையில் சீரியலில் இருந்து விலகியது குறித்து நடிகை தேப்ஜானி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள பதிவில்,”என்னை நன்றாக நடத்திய அன்பான குழுவிற்கு நன்றி. என் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒரு சிலரை நான் இங்கு சந்தித்தேன் அவர்கள் என் நலம் விரும்பிகள். மானியா ஆனந்த், ஸ்வேதா மற்றும் சாந்தினி ஆகியிருடன் பணிபுரிவதை நிச்சயமாக நான் மிஸ் செய்வேன். ஆனால் நான் உங்களை மீண்டும் சந்திப்பேன் உங்கள் நட்பை பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். மிஸ் யூ ஆல்” என்று பதிவிட்டு உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here