தனக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையும் இல்லை என்று நடிகை ஹனி ரோஸ் கூறியுள்ளார்.

பிரபல நடிகை

பாய் ஃப்ரெண்ட் என்ற மலையாள படத்தின் மூலம் 2005 ஆம் ஆண்டு சினிமா துறைக்கு அறிமுகமானவர் நடிகை ஹனி ரோஸ். அதன்பிறகு முதல் கனவே, சிங்கம்புலி, பட்டாம்பூச்சி உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். அதிகளவில் மலையாளத்தில் நடித்து வரும் நடிகை ஹனிரோஸ், தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் சில படங்கள் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான வீர சிம்ஹா ரெட்டி படத்தில் அவர் நடித்திருந்தார். இவரது நடிப்பில் பூக்காலம் என்ற மலையாள திரைப்படம் வெளிவர உள்ளது.

திருமண ஆசை இல்லை

இந்நிலையில் திருமணம் குறித்து தனது கருத்தை மனம் திறந்து கூறியுள்ளார் நடிகை ஹனி ரோஸ். இடுதொடர்பாக அவர் கூறி இருப்பதாவது, “நான் எந்த ஒரு திருமணத்திற்கு சென்றாலும் எல்லோருடைய பார்வையும் என் மேல் தான் இருக்கிறது. அதனாலேயே நான் யாருடைய திருமணத்திற்கும் போவதில்லை. வேடிக்கைக்காக யாரும் திருமணம் செய்து கொள்வதில்லை. என் காதலை நான் பல பேரிடம் சொல்லி இருக்கிறேன். பள்ளியில் படிக்கும் போது இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன. திருமணத்தின் மீது எனக்கு விருப்பம் இல்லை. சிறுவயதில் இருந்தே எனக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையும் இல்லை” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here