ஒரு நேரத்தில் இரு வேறு கதாபாத்திரங்களில் நடிப்பதால் ஒரு விதமான மன அழுத்ததில் உள்ளதாக நடிகை சாயா சிங் கூறியுள்ளார்.

சின்னத்திரையில் கவனம்

கன்னட படங்களின் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமான சாயா சிங், தனுஷுடன் இணைந்து நடித்த “திருடா திருடி” மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார் சாயா சிங். வெள்ளித்திரையில் போதிய வரவேற்பு கிடைக்காததால் தற்போது சின்னத்திரையில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது கன்னடத்தில் அம்ருதாதரே என்ற தொடரில் நடித்து வருகிறார். அதே சமயம் தெலுங்கிலும் ஒரு தொடரில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மன அழுத்தம்

தெலுங்கு மற்றும் கன்னடம் என்று இரண்டு சீரியல்களின் படப்பிடிப்பும் ஒரே நேரத்தில் நடந்து வருவதால், இரண்டு கதாபாத்திரத்திற்கும் மாற்றி மாற்றி டப்பிங் பேசுவது கடினமாகவும், சவாலான ஒரு விஷயமாகவும் உள்ளதாக சாயா சிங் கூறியுள்ளார். பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கதாபாத்திரங்கள் என்று மாற்றி மாற்றி வசனங்கள் பேசுவதால் மனதளவில் தயாராக வேண்டி உள்ளது என்றும் இது ஒரு விதமான மன அழுத்தத்தை தருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here