நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி C/O ராணி தொடர் 250 எபிசோடுகளை கடந்துள்ளது.

சின்னத்திரையில் வெற்றி

70களில் நடிக்க துவங்கிய நடிகை ராதிகா சரத்குமார், தமிழ் படங்களில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளிலும் நடித்து வருகின்றார். சில படங்களில் டப்பிங் ஆர்டிஸ்ட்டாகவும் பணியாற்றிய நடிகை ராதிகா சரத்குமார், 1991 ஆம் ஆண்டு தூர்தர்ஷனில் ஒளிபரப்பான “பெண்” என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிக்க துவங்கினார். நாலாவது முடிச்சு, விடுதலை தொடர்களை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி, அண்ணாமலை உள்ளிட்ட தொடர்களின் மூலம் சின்னத்திரையிலும் ஃபேமஸானார்.

வெற்றி பெற்ற 250 எபிசோட்

வாணி ராணி, சித்தி 2, திருமகள் உள்ளிட்ட பல தொடர்களிலும் நடித்தார் நடிகை ராதிகா சரத்குமார், தற்போது கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி C/O ராணி என்னும் தொடரில் ராதிகா சரத்குமார் நடித்து வருகிறார். கடந்த ஜூன் 2022 முதல் இந்த சீரியல் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் பிரீத்தி சஞ்சீவ், ராதிகா சரத்குமார், ராணி சுவாமிநாதன், அர்ஜுன், தனலட்சுமி சிவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தற்போது இந்த தொடர் 250 எபிசோடுகளை கடந்துள்ளது. மேலும் சிறப்பு எபிசோடாக இரண்டு மணி நேரம் ஒளிபரப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கலைஞர் டிவி போஸ்டருடன் தனது சமூக வலைதளபக்கத்தில் பதிவிட்டுள்ளது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த தொடர் 250 எபிசோடுகளை கடந்துள்ளதால் கமெண்ட்கள் மூலம் ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here