அர்னவ் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது என நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.

வழக்குப்பதிவு

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் திவ்யா. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக தனது முதல் கணவரை பிரிந்த திவ்யா, இரண்டாவதாக தன்னுடன் இணைந்து சீரியலில் நடித்த அர்னவ்வை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு தன் கர்ப்பமாக இருக்கும் செய்தியையும் பகிர்ந்து கொண்டார் திவ்யா. அதன் பிறகு அர்னவ், செல்லம்மா சீரியலில் நடிக்கும் அன்ஷிதாவுடன் நெருக்கமாக பழகுவதாகவும், தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு கூறியிருந்தார் திவ்யா. அதன் அடிப்படையில் அர்னவ் மீது வழக்கு பதிவு செய்து சிறையிலும் அடைத்தனர். அதன் பிறகு பெயிலில் அர்னவ் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரத்து செய்ய முடியாது

பல பிரச்சனைகளுக்கு பிறகும் ஓயாத திவ்யா, அர்னவ் மீது எக்கச்சக்க குற்றச்சாட்டுகளை முன் வைத்து பல வீடியோக்களை வெளியிட்டது மட்டுமல்லாமல் பல பேட்டிகளிலும் கூறி வந்தார். தற்போது இருவரும் தனித்தனியே வாழ்ந்து வரும் நிலையில் சமீபத்தில் திவ்யாவுக்கு பெண் குழந்தையும் பிறந்தது. திவ்யா கொடுத்த புகாரின் பேரில் அர்னவ் மீது மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி அர்னவ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தொடர்பான விசாரணை இன்று நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் திவ்யாவை அவர் துன்புறுத்தியதற்கான ஆதாரத்தை காவல்துறையினர் கோர்ட்டில் சமர்ப்பித்தனர். இதனால் குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டி இருப்பதால், அர்னவ் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது என நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here