’NTR 30’ பட ஷூட்டிங்கில் நடிகர் சைஃப் அலி கான் பங்கேற்றுள்ள புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதிகாரபூர்வ அறிவிப்பு

தேசிய விருது பெற்ற பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் அதிகாரப்பூர்வமாக ‘என்டிஆர் 30’ படக்குழுவில் இணைந்துள்ளார். கதாநாயகன் ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார். கொரட்டாலா சிவா இயக்கி வரும் இந்தப் படம் மூலம் ஜூனியர் என்டிஆர் மற்றும் சைஃப் அலிகான் இருவரும் முதல் முறையாக இணைந்து நடிக்கின்றனர். ’NTR 30’ திரைப்படம் தெலுங்கு மொழியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஆக்‌ஷன்- ட்ராமா திரைப்படம். இதில் சைஃப் அலிகான், ஜூனியர் என்டிஆர் உடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தெலுங்கில் அறிமுகம்

’என்டிஆர் 30’ படப்பிடிப்புத் தளத்தில் இருந்து படக்குழு சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள புகைப்படம் மூலம் நடிகர் சைஃப் அலி கான் இப்படத்தில் இணைத்திருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். கடந்த மாதம் ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடந்த பூஜைக்குப் பிறகு ’NTR 30’ படத்தின் படப்பிடிப்புத் தொடங்கியது. இந்த படம் மூலம் நடிகை ஜான்வி கபூர் தெலுங்கில் அறிமுகமாகிறார். யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் இணைந்து ‘என்டிஆர் 30’ படத்தைத் தயாரிக்கிறது. மேலும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 இப்படம் பான் இந்திய அளவில் வெளியாக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here