இந்தியாவில் முதல் ஆப்பிள் நிறுவன விற்பனையகம் மும்பையில் திறக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஸ்டோர்

ஆப்பிள் நிறுவனம் தமிழகம் உட்பட சில பகுதிகளில் ஐ போன்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியாவில் ஐ போன்களின் விற்பனையை அதிகப்படுத்தும் நோக்கில் பிரத்யேக விற்பனை நிலையங்களை திறக்க அந்நிறுவனம் முடிவு செய்தது. இந்தியாவின் 25 ஆண்டு கால வர்த்தகத்தை கொண்டாடும் முதல் விற்பனை நிலையம் மும்பையில் திறக்கப்பட்டுள்ளது.

சிறப்பான சேவை

ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் குக் இந்தியாவின் முதல் ஆப்பிள் நிலையத்தை இன்று திறந்து வைத்தார். இந்த ஆப்பிள் விற்பனை நிலையத்தில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளதாகவும், வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. முதல் விற்பனை நிலையம் மும்பையில் திறக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, இரண்டாவது விற்பனை நிலையம் வியாழக்கிழமை டெல்லியில் திறக்கப்பட்ட உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here