சென்னையில் தனது ரசிகர்களுக்கு தடபுடலாக பிரியாணி விருந்து வைத்துள்ளார் நடிகர் சிம்பு.

தனக்கென தனி இடம்

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி, பின்னர் ஹீரோவாக தமிழ் சினிமாவை ஆண்டவர்தான் சிம்பு. நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், இசை அமைப்பாளர், பாடகர், எழுத்தாளர், நடன கலைஞர் போன்ற பன்முகம் கொண்ட சிம்பு, தனது தந்தை டி. ராஜேந்தர் முலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். உறவை காத்த கிளி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் சிம்பு. இதன்பின் தந்தை டி. ராஜேந்தர் இயக்கிய ‘காதல் அழிவதில்லை’ படத்தில் ஹீரோவாக நடித்தார். இதன்பின்னர் பல படங்களில் நடித்து, வெற்றிகளை குவித்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘மாநாடு’, ‘பத்து தல’ படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

பிரியாணி விருந்து

இந்நிலையில், நடிகர் சிம்பு இன்று சென்னையில் தனது ரசிகர்களை சந்தித்து பேசியுள்ளார். அதுமட்டுமல்லாமல் ரசிகர்களுக்கு பிரியாணி விருந்தும் பரிமாறியிருக்கிறார். ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ஏராளமான ரசிகர்களும் கலந்துகொண்ட இந்நிகழ்வில், ரசிகர் மன்ற மாவட்ட தலைவர்கள் மற்றும் ரசிகர்களுடன் கலந்துரையாடி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here