மகாராஷ்டிரா மாநிலத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கவிந்த பேருந்து

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் இருந்து மும்பை நோக்கி இசைக் குழுவினரை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. ராய்காட் மாவட்டத்தில் உள்ள ஷிங்ரோபா கோவில் அருகே இன்று அதிகாலை சென்று கொண்டிருந்த அந்த பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

12 பேர் பலி

விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். உள்ளூர் போலீசாருடன் மலையேற்ற குழுவினரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த கோர விபத்தில் 12 பேர் உயிரிழந்ததுடன், 27 பேர் காயமடைந்தனர். விபத்துக்குள்ளான பேருந்தில் பயணித்தவர்கள் மும்பையில் உள்ள சியோன் மற்றும் கோரேகான் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here