சிரஞ்சீவியின் தம்பி நாக பாபுவின் மகள் விவாகரத்து செய்யப் போவதாக சில தகவல்கள் வெளிவந்துள்ளது.

குடும்பத்தில் குழப்பம்

விஜய் சேதுபதியுடன் “ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்” என்ற படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் நிஹரிகா. இவர் தெலுங்கில் சூப்பர் ஸ்டார் ஆக இருக்கக்கூடிய சிரஞ்சீவியின் தம்பியின் நாக பாபுவின் மகள். இவர் சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். நடிகையாக மட்டும் இல்லாமல் தயாரிப்பாளராகவும் இருக்கக்கூடியவர் நிஹரிகா. இவருக்கு கடந்த 2020ம் வருடம் டிசம்பர் மாதம் உதய்பூரில் உள்ள ஓபராய் உதய்விலாஸில் கோலாகலமாக திருமணம் நடந்தது. கடந்த சில மாதங்களாகவே நிஹரிகா கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார் என்று சொல்லப்பட்டது.

கருத்து வேறுபாடு

கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருவதால், கடந்த மாதம் நிஹரிகாவின் கணவர் வெங்கட சைதன்யா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நிஹரிகாவுடன் இருந்த அனைத்து புகைப்படங்களையும் டெலிட் செய்தார். மேலும் அவரை அன்பாலோவும் செய்தார். ஆனால் நிஹரிகா அப்போது அவரை ஃபாலோ செய்து கொண்டுதான் இருந்தார். ஆனால் தற்போது நிஹரிகாவும் அவருடைய இன்ஸ்டாவில் இருந்து வெங்கடா சைதன்யா சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கிவிட்டார். அவரை அன்பாலோவும் செய்துவிட்டார். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு நிலவி உள்ளதாகவும் விரைவில் விவாகரத்து செய்யப் போவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. நிஹரிகா சமீபத்தில் சொந்தமாக ஒரு பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இவர் ஏற்கனவே தெலுங்கில் ஜீ5 நிறுவனத்தில் சில தொடர்களை தயாரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here