தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் தடை மசோதாவிற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். 

சட்ட மசோதா

கடந்த ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் ஆன்லைன் தடை மசோதா நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்ட்டது. அந்த மசோதாவை ஆறு மாதங்கள் கழித்து ஆளுநர் திருப்பி அனுப்பினார். மேலும் அந்த மசோதாவில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்திருந்தார். இதனைத்தொடர்ந்து மீண்டும் இந்த தடைச் சட்ட மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி நிறைவேற்றப்பட்டு, மார்ச் 24ம் தேதி முறைப்படி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளும் தடை மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தன.

ஒப்புதல்

இந்நிலையில் இரண்டாம் முறை நிறைவேற்றி அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். மசோதாவில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என ஆளுநர் கூறியிருந்த நிலையில், எந்தவித மாற்றமும் செய்யாமல் தமிழக சட்டமன்றத்தில் அந்த மசோதா மீண்டும் இயற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தண்டனை விவரம்

தற்பொழுது நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாப்படி, ஆன்லைனில் ரம்மி விளையாடினால் 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்படும். ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது 3 மாத சிறை தண்டனை, அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here