விறுவிறுப்பாக நகரும் பாக்கியலட்சுமி தொடரில் அடுத்து என்ன நடக்க இருக்கிறது என்று ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.

தற்கொலை முயற்சியில் இனியா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் தற்போது விறுவிறுப்பான திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கிறது. இனியா செய்யும் ஒவ்வொரு தவறான விஷயங்களையும் கண்டித்து வருகிறார் ராதிகா. இந்நிலையில் சமீபத்தில் போன் பார்த்துக் கொண்டிருக்கும் இனியாவை போய் தூங்க சொல்லி ராதிகா கூறுகிறார். மறுத்து பேசி ராதிகாவிடம் கோபமாக பேசுகிறார் இனியா. இதனால் கோபி, ராதிகா சொல்வது சரி தானே என்று ராதிகாவுக்கு சப்போர்ட் செய்து பேசுகிறார். மயூவை போய் தூங்கச் சொன்னவுடன் எழுந்து சென்றாலே, ஆனால் நீ மட்டும் எதற்கு எல்லா விஷயத்திலும் எதிர்த்து எதிர்த்து பேசுகிறாய் என்று கோபி கண்டிப்புடன் பேச, இனியாவிற்கு கோபம் வந்து விடுகிறது. இதனால் எல்லா விஷயத்திலும் ராதிகாவுக்கு சப்போர்ட் செய்யும் கோபி மேல் இருக்கும் கோவத்தில், தாத்தா சாப்பிட வைத்திருந்த மாத்திரைகளை எடுத்து இனியா சாப்பிட்டு விடுகிறார். உடனே தேம்பி அழுகும் இனியாவை பார்த்து தாத்தா “என்னம்மா ஆச்சு, ஏன் அழுகிறாய்” என்று கேட்கிறார். உடனே உங்க மாத்திரையை நான் சாப்பிட்டுவிட்டேன் தாத்தா என்று இனியா சொல்ல பதட்டமடையும் தாத்தா கோபியை கூச்சலிட்டு கூப்பிட்டு உடனே இனியாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர்.

அம்மாவுடன் செல்லும் இனியா

இனியா தற்கொலைக்கு முயற்சி செய்த விஷயத்தை, கோபியின் அப்பா பாக்யாவுக்கு போன் செய்து கூறுகிறார். உடனே ஷாக் ஆனா பாக்யா எழிலை கூட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்து செல்கிறார். தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமடையும் இனியா, பாக்கியாவுடன் பாக்கியா வீட்டுக்கு செல்வாரா? அல்லது கோபியுடன் செல்வரா? என்று குழப்பமாக இருந்தது. ஆனால் இன்றைய எபிசோடில் அதற்கான விடையும் தெரிந்து விடுகிறது. வாமா செல்லம் வீட்டுக்கு போகலாம் என்று கோபி இனியவை கூப்பிடும் போது, அவரது கையை விளக்கி விட்டு பாக்யாவுடன் செல்கிறார் இனியா. வீட்டிற்கு சென்றவுடன் சந்தோஷமாக இருக்கிறார்.

காப்பாற்றும் பாக்யா

பாக்யாவுடன் சென்ற இனியாவால் மனமுடைந்து போன கோபி, அளவுக்கு அதிகமான மதுவை அருந்திவிட்டு நடுரோட்டில் விழுந்து கிடக்கிறார். இதனை அந்த வழியாக சென்ற ஒரு நபர் பார்த்து, பாக்யாவுக்கு போன் செய்து, உங்களது கணவர் நடு ரோட்டில் குடித்துவிட்டு விழுந்து கிடக்கிறார் என்று விஷயத்தை கூறுகிறார். இதனால் பதட்டமடைந்த பாக்யா எழிலுடன் புறப்பட்டு வந்து கோபியை பத்திரமாக ராதிகா வீட்டுக்கு அழைத்துச் சென்று விடுகின்றனர். இதனை பார்க்கும் ராதிகா ஷாக் ஆகிறார். இவர் யார் உங்களுக்கு, எதற்காக நீங்க இவரை கூட்டிட்டு வரீங்க என்று ராதிகா கேட்க, இவர் எனக்கு யாரும் இல்லை தான் மேடம், ஆனால் ஒரு தோழியின் கணவர் மது அருந்திவிட்டு ரோட்டில் விழுந்து கிடப்பதை பார்த்துவிட்டு என்னால் சும்மா இருக்க முடியாது. அதனால் தான் இங்கு அழைத்து வந்தோம் என்று கூறி கோபியை விட்டுவிட்டு அங்கிருந்து எழிலும் பாக்கியமும் புறப்படுகின்றனர்.

விரிசல் வருமா?

மது அருந்திவிட்டு வீட்டுக்கு வராதீர்கள் என்று பலமுறை ராதிகா கூறியும் மீண்டும் மீண்டும் அளவுக்கு அதிகமான மதுவை அருந்துகிறார் கோபி. இதன்பிறகு என்ன நடக்கும் என்று ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையே பிரச்சனை வருமா? அடுத்து இந்த தொடரில் என்ன டுவிஸ்ட் இருக்கப் போகிறது என்று ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here