விடுதலை 1 திரைப்படத்தை பாராட்டி இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் வெளியிட்ட டுவிட்டால் ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர்.

பாராட்டிய பிரதீப்

கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவரது முதல் படமே சூப்பர் ஹிட் ஆனதும், இவருக்கு தமிழ் சினிமாவில் தனி கெளரவம் கிடைத்தது. முதல் படத்தின் மூலமாக முன்னணி இயக்குநர்களின் லிஸ்டில் சேர்ந்து கொண்டார். அதன்பிறகு இவர் இயக்கிய லவ் டுடே திரைப்படம் வேற லெவல் ஹிட் ஆகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது இந்த திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளது. இந்த படத்தின் வெற்றியால் புகழின் உச்சியில் இருக்கும் பிரதீப் ரங்கநாதன் சமீபத்தில் சூரி நடிப்பில் வெளியான விடுதலை பார்ட் 1 திரைப்படத்தை பாராட்டும் விதமாக டுவீட் செய்து இருந்தார்.

வம்பில் சிக்கிய பிரதீப்

பிரதீப் ரங்கநாதன் பதிவிட்டு இந்த பதிவில், “அசாதாரணமான படம். வெற்றிமாறன் மற்றும் படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்” என குறிப்பிட்டு இருந்தார். இதை பார்த்த நெட்டிசன்கள் இரண்டு ஹிட் படம் கொடுத்ததுமே மரியாதை தெரியாமல் போய் விட்டதா? வயதிலும் அனுபவத்திலும் பெரியவரை சார் என்று கூட கூப்பிட தெரியாதா? என்று கண்டபடி இவரை கமெண்ட் செய்தும், ட்ரோல் செய்தும் வருகின்றனர். டுவிட்டில் வெற்றிமாறன் சார் என போடுங்க ப்ரோ என்று இவருக்கு ரசிகர்கள் அறிவுரையும் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here