விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணே கலைமானே தொடரிலிருந்து விலகப்போவதாக அதிவகாரப் பூர்வமாக அறிவித்துள்ளார் நடிகை பிரேமி வெங்கட்.

உறுதி

விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் ஒன்றாக இருக்கக் கூடியது கண்ணே கலைமானே சீரியல். இந்த தொடரில் விஜயலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை பிரேமி வெங்கட். சமீப காலமாகவே இவர் இந்த தொடரில் இருந்து விலகப் போவதாக தகவல்கள் வெளிவந்தது. ஆனால் அதனை இப்போது உறுதி செய்யும் விதமாக நடிகை பிரேமி வெங்கட் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது விலகலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

நிலவும் குழப்பம்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்; “வணக்கம், அனைவருக்கும் இதைத் தெரிவிக்க விரும்பினேன், கண்ணே கலைமானே சீரியலில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகினேன். கண்ணே கலைமானே சீரியலில் விஜயலட்சுமியை எனக்கு வழங்கியதற்கு நன்றி. அனைவரையும் வேறொரு திட்டத்தில் சந்திப்போம் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். நடிகை பிரேமி நாச்சியார்புரம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர். அதன்பிறகு சுந்தரி, நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார். கண்ணே கலைமானே தொடரில் இருந்து இவரது விலகளை அறிவித்தபிறகு இவரது கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்ற குழப்பம் நிலவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here