சென்னையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியை காண சேப்பாக்கம் மைதானத்தில் திரைப்பிரபலங்கள் குவிந்தனர்.

கிரிக்கெட் ரசிகர்கள்

சினிமாவில் எந்த அளவிற்கு ரசிகர்களுக்கு ஆர்வம் இருக்கிறதோ, அதேபோல் விளையாட்டுகளிலும் ஆர்வமாக இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக கிரிக்கெட் என்றால் அனைவருக்கும் தனி உற்சாகமும், ஆர்வமும் வந்து விடுகிறது. அந்த வகையில் நேற்று சென்னையில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் ஒன்று கூடினர். 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் நடக்கும் போட்டி என்பதால் மக்கள் கூட்டம் அலைமோதியது. அது மட்டும் இல்லாமல் சினிமா பிரபலங்களும் அங்கு ஒன்று கூடி அரவாரம் செய்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஊக்குவிக்கும் விதமாக சினிமா பிரபலங்கள் பலரும் மஞ்சள் நிற டி-ஷர்ட் அணிந்து உற்சாகமாக காணப்பட்டனர்.

ஒன்று கூடிய பிரபலங்கள்

நடிகர் சிவகார்த்திகேயன், அவரது மகள் ஆராதனா, நடிகர் சதீஷ், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், யாஷிகா ஆனந்த், கோமாளி குரேஷி, நடிகை ரவீனா, விஜய் டிவி தொகுப்பாளர் மாகாபா ஆனந்த், கலக்கப்போவது யாரு பிரபலம் ஷரத், நடிகை வரலட்சுமி சரத்குமார், ஹாரிஸ் கல்யாண், இவானா, நதியா, ஆடை மற்றும் குளுகுளு படங்கள் இயக்குநரான ரத்னகுமார், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்ட பல பிரபலங்கள் அங்கு ஒன்றுகூடி போட்டியை கண்டு களித்து ஆரவாரம் செய்தனர். இவர்களது வீடியோக்களும், புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here