தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கக்கூடிய நடிகர் நாக சைதன்யா நடிகை ஷோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் செய்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

சமந்தாவுடன் விவாகரத்து

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கக்கூடியவர் நடிகர் நாக சைதன்யா. நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 2017 ஆம் ஆண்டு சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. அதன்பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2021 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். விவாகரத்துக்கு பிறகு படங்களில் நடிப்பதில் பிஸியாக இருந்து வந்த நாக சைதன்யாவை சுற்றி பல காதல் வதந்திகள் பரவி வந்தது.

சிக்கிய நாக சைதன்யா

பொன்னியின் செல்வன் படத்தில் வானதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஷோபிதாவுடன் நாக சைதன்யா காதலில் இருப்பதாக தகவல்கள் பரவி வந்தது. அதுதொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வேகமாக பரவிய நிலையில், அந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்று கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மேலும் ஒரு புகைப்படம் வெளிவந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் நாக சைதன்யா லண்டன் சுற்றுப்பயணம் சென்றபோது அங்குள்ள ஒரு ஹோட்டலுக்கு உணவருந்த சென்றுள்ளார். அங்கே சமையல் கலைஞருடன் எடுக்கப்பட்ட போட்டோவில் தூரத்தில் நடிகை ஷோபிதா துலிபாலா அமர்ந்திருக்கிறார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. பிப்ரவரி மாதம் பதிவிட்ட இந்த பதிவு ரசிகர்கள் கண்ணில் தற்போது மாட்டி உள்ளது. இதில் ஷோபிதாவின் முகத்தை வட்டம் போட்டு ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். இதுகுறித்து எந்த ஒரு மறுப்புச் செய்தியையும் இதுவரை இரு தரப்பினரும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here