1980களில் தமிழ் திரையுலகில் நகைச்சுவைகளில் அசத்தி மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் செந்தில். இவர் 1984ம் ஆண்டு கலைச்செல்வி என்பவரை திருமணம் செய்துகொண்டார். செந்திலின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில் அவர் சாமி தரிசனம் செய்தார். இதைத்தொடர்ந்து, செந்தில் – கலைச்செல்வி தம்பதியினருக்கு இன்று பீமரத சாந்தி திருமண விழா நடைபெற்றது. கோயில் மண்டபத்தில் 64 கலசங்கள் வைக்கப்பட்டு பீமரத சாந்தி சிறப்பு ஹோமங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here